உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனேகமானவர்களுக்கு தமிழ் சார்பாக உருவாகி இயங்கிக்கொண்டிருக்கும் பல அமைப்புக்கள் பற்றி தெரியும். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு அமைப்புத் தான் உலக தமிழ் ஆராய்சி நிறுவனம் என்பதும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதவேண்டும் ஏனெனில் அத்துணை பிரபல்யமானது இந்த அமைப்பு. இந்த அமைப்பானது 1964ஆம் ஆண்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பல்வேறுபட்ட நாடுகளின் அறிஞர்களை இணைத்து அருட்திரு. சேவியர் நீக்கிலாஸ் ஸ்ரனிஸ்லாஸ் என்ற இயற் பெயர் கொண்ட தவத்திரு தனிநாயகம் என்ற உலகத்தமிழ் மக்களால் அறியப்பட்ட அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்டது.
