தமிழ் வளர்த்தோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் வளர்த்தோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2020

அதிகமான நாவல்களைப் படைத்த ஈழத்து தமிழ் எழுத்தாளினி

ந. பாலேஸ்வரி
அவ்வப்போது வெவ்வேறுவிதமான மிகவும் அவசியமிக்க மற்றும் ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களும் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் என நான் கருதுபவற்றை சுருக்கமான கட்டுரைகளாக தொகுத்துத் தந்துகொண்டிருப்பது எனது எழுத்தை ரசிக்கும் நீங்கள் அறியாதவிடயமே அல்ல. அதுபோலவே தான் இந்த ஆக்கத்திலும் நான் ஒரு முக்கியமான நபரைப்பற்றி மிகச் சுருக்கமாக தர முயற்சித்திருக்கிறேன்.

புதன், 8 ஜூலை, 2020

உலகத்தமிழ் ஆராட்சி நிறுவன உதயம்

உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனேகமானவர்களுக்கு தமிழ் சார்பாக உருவாகி இயங்கிக்கொண்டிருக்கும் பல அமைப்புக்கள் பற்றி தெரியும். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு அமைப்புத் தான் உலக தமிழ் ஆராய்சி நிறுவனம் என்பதும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதவேண்டும் ஏனெனில் அத்துணை பிரபல்யமானது இந்த அமைப்பு. இந்த அமைப்பானது 1964ஆம் ஆண்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பல்வேறுபட்ட நாடுகளின் அறிஞர்களை இணைத்து அருட்திரு. சேவியர் நீக்கிலாஸ் ஸ்ரனிஸ்லாஸ் என்ற இயற் பெயர் கொண்ட தவத்திரு தனிநாயகம் என்ற உலகத்தமிழ் மக்களால் அறியப்பட்ட அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்டது.

செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட நாயகர்கள் 2

கணபதி ஐயர்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் “கணபதி ஐயர்” நீங்காத இடம் பிடித்த ஒரு கவிராயரும் நாடக எழுத்தாளரும் ஆவார். இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவருடை பங்களிப்பு மிகப்பெரியதாகும். இவர் பற்றி 19ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்டுள்ளதாயினும் பின்னைய காலங்களில் அநேகமானவர்களுக்கு ஞாபகத்தில் வராத ஒரு மனிதராக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. தற்கால எழுத்தாளர்களும் அறிஞர்களும் கணபதி ஐயர் பற்றி அதிகம் நினைவு படுத்தாமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி இவரைப்பற்றி ஒரு சிலர் மட்டுமே பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் மற்றொரு காரணமாக இருக்கலாம். மற்றும் இவர் பற்றிய விரிவான வரலாறுகள் போதுமான தகவல்களோடு காணப்படாமையும் அந்தக்காலத்தில் வரலாற்றுத் தேவையின் பொருட்டான தகவல்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தகவல்கள் சரியாக சேகரித்து பாதுகாக்கப்படாமையும் இலங்கையில் இவரைப்பற்றிய அதிக தகவல்களுடனான படைப்புக்கள் வெளிவராமைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் இவரைப்பற்றி இலங்கையில் சில பிரபலமான

திங்கள், 22 ஜூன், 2020

தமிழ் இருப்பிற்காய் இமான் தந்த கௌரவம்

உலகத்த தமிழர் அறிந்திருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு சம்பவம்

இசையமைப்பாளர் டி. இமான்

அண்மையில் ஒரு சம்பவகம்பற்றிய கற்கையின்போதுதான் இந்த சம்பவத்தை நான் அறிந்திருந்தேன். இதை உங்களுக்கு தெரியுமா என்ற தலைப்பில் பிரசுரிக்கலாமா என்று நினைத்தேன் பின்னர் வேண்டாம் தலைப்பை சற்று மாற்றி வித்தியாசமாக தருவோம் என முடிவெடுத்து மேற்காட்டியபடி தலைப்பிட்டேன். 

திரு. டி. இமான் அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இது என்ன கேள்வி அவரை அறியாதவர்களுமுண்டா. தயவு செய்து நடிகர் மற்றும் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி பற்றிதான் கேட்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.

வெள்ளி, 19 ஜூன், 2020

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட நாயகர்கள் 1


நினைவிலிருந்து மறையப்பார்க்கும் தமிழ் வளர்த்த முன்னோர்கள்

அறிமுகம்

இலங்கையில் முன்னைய காலப்பகுதியில் தமிழ் வழர்த்த பெரியோர் பலர் இருந்துள்ளனர் என்பது வரலாறு. இவர்கள் பற்றிய வெளியீடுகள் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெவ்வேறு எழுத்தாளர்களினால் வெவ்வேறு காலப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சில எழுத்தாளர்கள் தமிழ் வழர்த்த பெரியோர்கள் பலரை பற்றிய விடயங்களை கட்டுரைகளாக ஒரே நூலில் தொகுத்து வெளியிட்டுள்மை பல்வேறு பதிவுகள் மூலம் அறியக்கூடியதாகவும் இருக்கிறது. சில நூல்கள் இன்னமும் நூல் நிலையங்களிலும், புத்தகசாலைகளிலும் இணையத்தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிகிறது. தமிழ் வளாச்சிக்காக பங்களிப்புச்செய்த இந்த பெரியோர்கள் சிலர் இன்றும் மிகுந்த பிரபலம் மிக்கவர்களாக அனேகமானவர்களால் பேசப்படுபவர்களாகவும் குறித்துரைக்கப் படுபவர்களாகவும் உள்ளனர். அத்தோடு இவர்களில் சிலர் சில எழுத்தாளர்கள் மேற்கொள்கின்ற ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்படுகின்றவர்களாகவும் உள்ளனர். சில பெரியோர்கள் பற்றி தற்காலத்தில் அறியக்கிடைக்கின்றபோது இப்படி ஒருவர் இருந்திருக்கின்றாரா இவர் தழிழுகிற்கு தமிழ் வளர்ச்சியின்பொருட்டு இத்துணை பங்களிப்பு செய்திருக்கின்றாரா இவரைப்பற்றி இதற்குமுன்னர் நாம் அறிந்திருக்கவில்லையே என்றெல்லாம் எண்ணத்தோன்றும் நிலையும் இருக்கிறது.

வியாழன், 18 ஜூன், 2020

இலங்கையின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது தமிழ் பத்திரிகை

முன்பு ஒரு காலத்தில் பத்திரிகைகள் என்று ஏதும் இருந்ததில்லை. எல்லா தகவல்களுமே அநேகமாக வாய் வழியாகவே பரவி வந்தன என்பது யாவரும் அறிந்ததே. கட்டுரைகள், கவிதைகள், கதைகள், வரலாறுகள் மற்றும் தகவல் பதிவுகள் போன்றவை வாய்வழியாகவும், கல்வெட்டுக்களாகவும் செதுக்கப் பட்டிருந்தன அன்றேல் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியினால் செதுக்கப்பட்டிருந்தன. இவையே அக்காலத்தில் வழக்கத்திலிருந்த எழுத்தூடகங்களாக இருந்தமை நான் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. இவை கூட பெருமளவில் இல்லாது குறிப்பிடக் கூடிய சில பிரமுகர்களால் மிகச்சொற்ப அழவிலேயே அந்த நாட்களில் உருவாக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு உருவாக்கப் பட்டவை அனைத்தும் அனேகமாக ஒரேயொரு பிரதியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. இந்த காரணத்தால் பல்வேறு வகையான வரலாற்று முக்கியத்துவவம் வாய்ந்த பல தகவல்கள் மற்றும் வரலாறுகள் இன்றும் கிடைத்தற்கரியனவாக காணப்படுகின்றன.