கணபதி ஐயர்
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் “கணபதி ஐயர்” நீங்காத இடம் பிடித்த ஒரு கவிராயரும் நாடக எழுத்தாளரும் ஆவார். இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவருடை பங்களிப்பு மிகப்பெரியதாகும். இவர் பற்றி 19ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகம் பேசப்பட்டுள்ளதாயினும் பின்னைய காலங்களில் அநேகமானவர்களுக்கு ஞாபகத்தில் வராத ஒரு மனிதராக இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. தற்கால எழுத்தாளர்களும் அறிஞர்களும் கணபதி ஐயர் பற்றி அதிகம் நினைவு படுத்தாமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி இவரைப்பற்றி ஒரு சிலர் மட்டுமே பதிவுகளை மேற்கொண்டுள்ளமையும் மற்றொரு காரணமாக இருக்கலாம். மற்றும் இவர் பற்றிய விரிவான வரலாறுகள் போதுமான தகவல்களோடு காணப்படாமையும் அந்தக்காலத்தில் வரலாற்றுத் தேவையின் பொருட்டான தகவல்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தகவல்கள் சரியாக சேகரித்து பாதுகாக்கப்படாமையும் இலங்கையில் இவரைப்பற்றிய அதிக தகவல்களுடனான படைப்புக்கள் வெளிவராமைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனாலும் இவரைப்பற்றி இலங்கையில் சில பிரபலமான









